அன்பினால்
படைத்தேன்
பண்பினைக்
கொடுத்தேன்
இன்பமாய்
வாழ வழியும் செய்தேன்
அன்பினை
மறந்து பண்பினை இழந்து
துன்பமாய்
வாழ்ந்திட காரணம் ஏன்
1. படைத்தார்
கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
மரித்தார்
கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
பரிசுத்த
ஆவியால் ஆளுகை செய்யும்
பரிசுத்தர்
கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
2. பாவத்தில்
மாண்டாய், சாபத்துள்ளானாய்
தாபமாய்
கேட்கிறார் காரணம் ஏன்
பாவத்தை
விட்டு, இயேசுவை ஏற்று
மாசின்றி
வாழா காரணம் ஏன்?
No comments:
Post a Comment