அன்பு
தேவ அன்பு உன்னைத் தேடும் அன்பு
உருக்கும் நதி போல உள்ளம்
நிறையுமே
கல்மனம் உருகுமே கல்வாரி அன்பிலே
1. பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே
உன் நண்பனாய் உன் தோழனாய்
உம் மேய்ப்பனாய் உன் மீட்பராய்
ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
2. சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே
எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்
முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார்
ஜீவ புஸ்தகத்தில் பெயரை எழுதவே
என்றும் ஜீவ புஸ்தகத்தில் பெயரை ஏழுதவே
3. அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே
உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே
மிக அன்புடன் பின் செல்வாயே
அன்பு அன்பை கேட்கிறதே - அந்த
அன்பு அன்பை கேட்கின்றதே
No comments:
Post a Comment