பல்லவி
அன்பின் முரசு அகிலத்தில் கேட்கிற முழக்கம்
ஆண்டவர் சிலுவை நேசரால் - 2
1. மாண்ட இருதயங்களுக்குள் ஜீவனை வைத்தார் - (2)
மாந்தரின் நம்பிக்கையை மகிழச் செய்தார் - (2)
அற்புதத்தை அகிலத்தில் அறிவித்தார்
அறையுண்ட சிலுவை நேசர் தாமே - 2 - அன்பின்
2. சிலுவையில் சீரேசு ஜீவனை விட்டார் - (2)
சஞ்சலங்களினின்றும் விடுதலை ஈந்தார் - (2)
அன்பின் பாத்திரத்தை யேசு அளித்தார்
அறையுண்ட சிலுவை நேசர் தாமே - 2 - அன்பின்
3. கபோதி கட்குக் கண்களைக் கொடுத்தார் - (2)
கால் இல்லாத ஊனர்க்குக் காலை ஈந்தார் - (2)
காட்சியைக் கர்த்தர் யேசு காட்டினார்
கடாவப்பட்ட சிலுவை நேசர் தாமே - 2 - அன்பின்
4. தூக்க மயக்கங் கொண்ட சுத்த சோம்பேறியை - (2)
சும்மா ஜீவியத்தைப் போக்கும் சுகஜீவியை - (2)
சுத்தர் இயேசு கர்த்தர் முற்றும் கலைத்தார்
சுதன் சுவிசேஷ சிலுவை நேசர் தாமே - 2 - அன்பின்
5. அன்பாகவே அழைக்கிறார் அனைவரையும் - (2)
அலையும் அசடர்கட்கு வழியையும் - (2)
காசினியோர் கண்டு வாசிக்கவும்
கடாட்சித்தார் சிலுவை நேசர்தாமே - 2 - அன்பின்
No comments:
Post a Comment