அன்பர்
இயேசுவின் அன்பு
அது
அளவிட முடியாது
கடற்கரை மணலை கணக்கிடலாம்
அவர் அன்பிற்கீடேது - 2
1. சிலுவை நாயகன் சிந்திய ரத்தம்
அன்பாய் வழிகின்றது
சிறுமைப்பட்ட ஜனங்களை
மீட்க ரத்தம் போகின்றது - 2 - அன்பர்
2. பாவம் பெருகின இடத்தில்
தேவகிருபை வெளிப்பட்டதே
மீறுதல் போக்க சிலுவையிலே
ரத்த வெள்ளம் பாய்ந்திடுதே - 2 - அன்பர்
3. ஆணிகள் அடித்து தொடங்கிய போதும்
தனக்காய் அழவில்லை - 2
கள்ளர்கள் நடுவில் கதறிடும் போதும்
உனக்காய் அழுகின்றார் - இயேசு - (3) -
அன்பர்
- Dinesh
No comments:
Post a Comment