பல்லவி
அன்பெனும்
அருட்பெரும் செல்வம் - அது
என்னகந்தனிலே இல்லையெனில்
என்னுடைய வாழ்வில் பயன் என்ன
என்னுடைய வாழ்வில் பயன் என்ன
சரணங்கள்
1. மண்ணோர்
மொழிகளை அறிந்திடினும்
விண்ணோர்
மொழிகளை உரைத்திடினும் - 2
என்பால்
நிலவும் பண்புகளில்
அன்போர்
அணுவும் இல்லையெனில்
வெண்கல
ஒலியும் தாளமிடும் - (2)
கிண்கிணி
நாதமும் ஆனவனே - அன்பெனும்
2. என்னுடல்
எரிதழல் கொண்டாலும்
என்
பொருள் முழுவதும் இழந்தாலும் - 2
என்
பலம் விந்தைகள் செய்தாலும்
எண்ணரும்
புகழ் எனையடைந்தாலும்
அன்பெனும்
இறையருள் இல்லையெனில் - (2)
என்னிடம்
உள்ளது எதுவுமில்லை - அன்பெனும்
3. மலைதனைப்
பெயர்க்கும் பலமிருந்தும்
அலை
கடல் தூர்க்கும் திறம் இருந்தும் - 2
கலைகளை
அறியும் அறிவிருந்தும்
உலகியல்
தெளியும் உளமிருந்தும்
நலம்
பல நல்கும் அன்பில்லையேல் - (2)
பலன்
தரா வாழ்வென் வாழ்வாமே - அன்பெனும்
No comments:
Post a Comment