அன்பின் தேவன் ஆண்டவர்
அடைக்கலம்
எனதாண்டவர்
கண்மணி
போல நம்மை நடத்தி
கடைசி
வரையில் காப்பவர்
1. துன்பங்கள்
சூழும் வேளையில்
துணையாய்
நின்று காத்திடுவார் - 2
துயரம்
யாவும் போக்கி நம்மை - (2)
தூய வழியில்
நடத்துவார் - (2) - அன்பின்
2. கவலை கஷ்டங்கள்
வந்தாலும்
இனி நாம்
கலங்க தேவையில்லை - 2
கர்த்தர்
நமக்காய் யுத்தம் செய்வார் - (2)
யாவையும்
நன்மையாய் மாற்றிடுவார் - (2) - அன்பின்
3. தீராத
வியாதிகள் வந்தாலும்
தீங்கென்னை
தொடரா காத்திடுவார் - 2
குறைகளை
எல்லாம் நீக்கி நம்மை - (2)
குணமாக்கி என்றுமே
அரவணைப்பார் - (2) - அன்பின்
No comments:
Post a Comment