அன்பின்
தெய்வமே எனக்குள் வாழ்பவரே
நீர் பேசினால் போதுமே ஆனந்தம் பொங்குதே
அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
- 3
1. பெருமழை போல் ஆவி ஊற்றணுமே
உம் பக்தரின் உள்ளத்திலே - 2
நாங்கள் ஆவியால் நிரம்பி துதிக்கணுமே
உங்க அன்பால் தாங்கணுமே - அல்லேலூயா
2. அயல் மொழியில் பேசணுமே
அதன் அர்த்தங்கள்
சொல்லணுமே - 2
நாங்கள்
வல்லமையால் நிரம்பணுமே
உந்தன்
பெயரைப் போற்றணுமே - 2 - அல்லேலூயா
3. ஜெப ஆவி வரம் என்னில் வேண்டுமே
ஜெப வீரனாய் மாறணுமே - 2
நாங்கள் விசுவாசத்தோடு ஜெபிக்கணுமே
ஐயா ஜெயக்கொடி பறக்கணுமே - 2 - அல்லேலூயா
4. ஆத்துமாக்கள் ஓடி வரவேண்டுமே
உம் அன்பை காணணுமே - 2
ஆடுகள் ஒன்றாய் கூடணுமே
உம் மந்தையில் சேரணுமே - 2 - அல்லேலூயா
No comments:
Post a Comment