293.
இராகம்: வசந்தபைரவி ரூபகதாளம்
(461)
பல்லவி
அன்பின் விருந்தருந்த சகோதரர் அனைவரும்,
வாரும்.
அனுபல்லவி
இன்பமுடன்
பூர்வ கிறிஸ்தவர் ஒன்றித்
திருத்
துறவாக விருந்துண்ட வாறு போல்
இணைந்து
தக வணிந்து, மிகப்
பணிந்து
மறம் தணிந்து தணிந்து - அன்
சரணங்கள்
1. நண்பர்கள்
கூட்டத்துக் கிந்த விருந்தொரு
நல்ல
அடையாளம் மதியும்,-ஏசு
நாதர்,
அன்பாய் இரும், என்ற கற்பனையை
நற்கருத்தாய்
அகம் பதியும்; மிகப்
பண்பட
யாவரும் கூடிக்குலாவியே
பரமனை
இங்கு துதியும்;-உங்கள்
பழம்
பகை யாவுங் கட்டிச் சுருட்டி அப்
பாலே
எறிந் ததை மிதியும்,
திண்
புவியில் யாரும் ஒன்றிப்பதற் கேற்ற
செய்கை
அறிந்து புரிவதற்கு வகை
தேடி
அன்பை நாடி, மனம்
கூடி,
கீதம் பாடிப் பாடி - அன்
2. உற்ற
சிநேக மதற்கு நிகர் சொல்ல
ஒன்றும்
இல்லை, அதை ஓரும்[1];-அதால்
ஊதியமான
சந் தோட சிலாக்கியம்
ஒக்க
இணைந் தங்கு சேரும்;-அன்பு
பெற்ற
சகோதரர் ஒன்றித்து-வாழ்வது
பெருத்த
மாட்சிமை பாரும்;-அதைப்
பேணி
உறாத சத் ராதிகட்கு வெகு
பீடைகளே[2] வந்து
சாரும்;
கற்றறிந்து
வேத கற்பனை மீறாமல்
கர்த்தருக்
கேற்க நடந்து பொறாமையைக்
களைந்து,
கற்பில் விளைந்து, அன்பில்
தளைந்து[3], தம்மில்,
குழைந்து குழைந்து - அன்
- ஜாண் பால்மர்
No comments:
Post a Comment