223. இராகம்: செஞ்சுருட்டி ஆதிதாளம் (439)
பல்லவி
அன்பே, பிரலாபம்[1] அகற்றும், என் அன்பனே,
சரணங்கள்
1. இந்த வேளை வந்து நிர்ப்பந்தம் தீரும் ஐயா;
சொந்தம் என் ஏசுதேவா,
நிந்தை துயரும் நீக்கி - அன்
2. மெத்தவும் பவம்
செய்தேன் சத்திய மறந்து முற்றும்;
இத்தரையை நாடி,
உன் சத்துருவானேன் ஐயா - அன்
3. நோயால் வருந்தி யானும்
தீயாய் எரிகின்றேனே,
நேயா, கிறிஸ்து
வெனும் தூயா, என தேசுவே - அன்
4. துன்பம் துயரம் நீக்கி இன்பம் அளியும், ஐயா,
உம்பர்[2] ஒளியே,
எந்தன் தம்பிரா, ஏசுநாதா - அன்
- ச. யோசேப்பு
No comments:
Post a Comment