அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்

                        ஆனந்தமாய் புகழ்கீதம் என்றும் பாடுவோம் - 2

                        அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட

                        ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் - 2

 

1.         தாயின் கருவிலே உருவாகும் முன்னரே

            அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே

            பாவியாகினும் பச்சைப் பிள்ளையாகினும்

            அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்

            மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர்

            பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர்

            அஞ்சாதீர் என்று நம்மைக் காத்து வருகின்றீர்

 

2.         உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்

            உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்

            உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்

            உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்

            அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்த திட்டம் தீட்டினீர்

            கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர்

            அஞ்சாதீர் என்று நம்மைக் காத்து வருகின்றீர்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு