1. ஆகாதவனின் சாவை நாம்
விரும்போம் அவன் பாவமாம்
வழியை விட்டு நம்மண்டை
மனந்திரும்பி வாழ்வதை
விரும்புவோம் என்றாண்டவர்
மாஆணையோடே சொன்னவர்.
2. மனிதனே இவ்வார்த்தையை
உன் மனத்தாபத்தில் நினை;
அமிழாதே இங்குனக்கே
நல்லாறுதல் கிடைக்குமே;
நொறுங்குண்டோரைஸ்வாமி யார்
அன்பாகப் பார்ப்போம் என்கிறார்.
3. ஆனாலும் உன் நினைவிலே
நீர் நிர்விசாரனாகாதே;
நெடுநாள் இருக்கின்றது
நான் இங்கே நன்றாய்ப் பூரித்து
இருந்தும் கடைசியிலே
மன்னிப்படைவேன் என்காதே.
4. மெய்தான் கர்த்தாவின் தயவு
பெரியதாக உள்ளது;
இதோ விசாரமின்றியே
அந்த நினைவின்பேரிலே
பொல்லாப்புச் செய்யும் மனிதன்
கோபாக்கினைக் குள்ளானவன்.
5. சுதனுக்காகத் தயவு
நாம் செய்வோம் என்றோர் உனக்கு;
நீ நாளை உயிருடனே
இருப்பாய் என்றதில்லையே;
நீ சாவாய் என்றறிகிறாய்
எப்போதோ என்றநிந்திராய்.
6. இப்போ குணப்படு; இப்போ
ஆங்காலம்; நாளை என்னவோ;
இப்போ சுகித்தோரில் சிலர்
ஓர் வாரம் போனால் போனவர்;
ஐயோ குணப்படாதோனாய்
நீ செத்தால் வாதைக்குள்ளாவாய்.
7. ஆ இயேசுஸ்வாமி மரணம்
அணுகுமுன்னே சீக்கிரம்
நான் உம்மண்டைக்குச்சேர நீர்
சகாயம் பண்ணக்கடவீர்.
நான் சாவுக்கின்றும் என்றைக்கும்
ஆயத்தமாயிருக்கவும்.
No comments:
Post a Comment