ஆயிரம் இருந்து
என்ன நமக்கு - தேவ
ஆலயம் ஒன்றே போதும் - 2
நாளெல்லாம் வாழ்ந்தென்ன நமக்கு
நம் நாயகன் அன்பொன்றே போதும்
- இயேசு
நாயகன் அன்பொன்றே போதும்
- ஆயிரம்
1. காலமென்னும் ஊஞ்சலிலே
கனிவுடனே
நம்மை ஆட வைத்தார் - 2
அன்பினிலே நம்மை வார்த்தெடுத்தார்
- (2) - நல்ல
பண்பினிலே நம்மை தோய்த்தெடுத்தார்
வேதனை தீயால் புடமிட்டார்
தேவா ....... தேவா ......
தேவா .....
வேதனை தீயால் புடமிட்டார்
- கடும்
சோதனையால் நல் மெருகிட்டார்
- (2) - ஆயிரம்
2. ஆஸ்தியை மலைப்போல் குவித்தாலும்
இந்த அகிலம் முழுவதையும் சேர்த்தாலும்
- 2
ஆத்தும மீட்பு இல்லையென்றால்
- (2)
அவைகளினால் ஒரு நன்மையில்லை
ஆண்டவர் பாத்திரத்தில் பங்குமில்லை
மனமே... மனமே... மனமே...
ஆண்டவர் பாத்திரத்தில் பங்குமில்லை
- அந்த
அருள் நாதர் மாளிகையில் இடமுமில்லை - (2) - ஆயிரம்
No comments:
Post a Comment