அருகினில்
வந்தேனே நான்
என்னை ஆசீர்வதித்திடுமே
சுடரொளிப் பட்டயமே
என் வாழ்வில் சுடர்விட வந்திடுமே
- 2
1. ஆதியாய் அந்தமாய்
அல்பாவாய் ஒமேகாவாய்
ஆதியில் வந்தவரே
அண்டினோர் வாழ்வில் இன்பம் தரும்
என்னரும் பெருமானே - 2
இருண்ட மனிதனின் வாழ்வினிலே
ஜோதியாய் திகழ்பவரே
திரண்டு
வந்திடும் பக்தர்களின்
குறைகள்
தீர்ப்பவரே - 2
தேவனே என் ராஜனே
என் அன்பனே என் இன்பனே
உம் அன்பையே என்றும் பாடுவேன்
உம் புகழையே எடுத்துச் சொல்வேன்
- 2 - அருகினில்
2. சேரக்கூடாத ஒளியினிலே
என்றும் வாசம் செய்பவரே
தேடி வந்திருக்கும் எங்களுக்கு
உம் தரிசனம் தருவீரே
நாடி வந்திடும் யாரையும்
வெறுத்துத் தள்ளாத தேவனே
கூடி வந்திருக்கும் எங்களுக்கு
உம் தரிசனம் தருவீரே - 2
நல்லவரே வல்லவரே
கருணையே கருணாமூர்த்தியே
நித்தியனே நிமலப்பாதனே
சற்குருவே உம் பாதம் சரணமே
- 2 - அருகினில்
https://www.youtube.com/watch?v=zutBZ1NLbpo
No comments:
Post a Comment