அருணோதயம் வந்திடும் காலமல்லோ
என்றென்றைக்கும்
சாமி துதி சாற்றிடுவோம்
பரிசுத்தமாய்
ஜீவியம் செய்திடுவோம்
பரலோக
பாக்கியத்தைப் பெற்றிடுவோம்
1. விண்ணில்
வாழும் தேவசேனைப் போற்றும் பாலன்
மண்ணில்
ஏழையாக வந்த மனுவேலன் - 2
நித்தம்
நித்தம் செய்யும் நன்மை யாவும்
எத்தனை
நாவாலும் பாட முடியாதன்றோ - (2) - அருணோதயம்
2. சரிரத்தைப்
பரிசுத்தம் செய்திடவும்
கர்த்தாதி
கர்த்தனையே சார்ந்திடவும் - 2
வாரும்
நாமும் தரிசித்திடுவோம்
அவர் நம்மில்
வைத்த தயை பெரிதேயன்றே - (2) - அருணோதயம்
3. அபிசேக
நாதரின் ஆசி பெறவும்
ஆவியின்
கனிகள் பெற்றிடவும் - 2
தேவாதி
தேவனின் தயை அல்லால்
வேறே ஏதும்
நம்முன் நிற்க முடியாதன்றோ - (2) - அருணோதயம்
- N. ஜட்சன்
No comments:
Post a Comment