ஆதியில்
இருந்த உம் வார்த்தை தானே
என் செவிகளில் கேட்கின்றதே
என் கண்ணாலே கண்ட உம் வார்த்தை தானே
என் சிந்தையைத் தொடுகின்றதே
ஒளியாக மாற உம் வழியாக மாற
எந்தன் வாழ்வை உம்மிடம் தந்தேன் தந்தேன்
பிதா குமாரன் நீரே பரிசுத்த ஆவி நீரே
வாரும் வாரும் வாரும் என் மேலே
ஒன்றாய் இணைந்திருப்போம் உயர்த்திடுவோம்
சரித்திரம் படைத்திடுவோம்
புது
சரித்திரம் படைத்திடுவோம்
1. ஆவியானவர் ஆவியில் நிறைந்து
திறப்பில் நின்றிடுவோம்
ஜீவனானவர் உம்மைப் போற்றி
பயணம் தொடர்ந்திடுவோம் - (2)
மரணத்தை ஜெயித்தவர்
உயிரோடு எழுந்தவர்
தரிசனம் தருபவர் நீரே
ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
அக்கினியாக மாறிப் போகும் தேவனும் நீரே
பெலனும் நீரே நீரே நீர் தானே - ஒன்றாய்
- Paul Thangiah
No comments:
Post a Comment