1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?
பழவினை
தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ? - (2)
2. பூதலத்தில்
யான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே
ஓதவுமறியேன்
உன்னத அன்பை ஓயாத்துதி சொல்வேன் - (2) - அழகிற்
3. இப்படிக்கொத்த
பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?
செப்பிடப்
பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே - (2) - அழகிற்
4. சுரரும்,
நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;
வரமளித்தே
தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் - (2) - அழகிற்
5. ஆசைக்கிசைந்த
நேசரின் நாமம் இயேசுகிறிஸ்தென்பதாம்;
காசினியெங்கும்
கேட்டறியாத கர்த்தன் திருப்பேராம் - (2) - அழகிற்
6. பதினாயிரம்பேர்
ஆயினும் இவரே அழகில் சிறந்தவராம்
பாவிதாம்
எமையே கண்மணிப்போல கருத்தாய் காப்பவராம் - (2) - அழகிற்
7. நாதன் கிறிஸ்தேசையன்னை
தேவ பிள்ளைகள் ஓதிடவே
மாதுசீயோன்கு
மாரி மகிழ்ந்து மங்களம் பாடிடவே - (2) - அழகிற்
- வேதநாயகம்
No comments:
Post a Comment