ஆசீர்வதியும்
ஆண்டவா
இப்புது மண மக்களை - 2
1. மங்களம் மணமகன் திருசெல்வனும்
மங்களம் மணமகள் திருசெல்வியும் - 2
மகிழ்வுடன் என்றும் வாழ்ந்திடவே
மரியின் மைந்தனை வாழ்த்துவீர்
மக்களின் கிருபையால் முடிசூட்டி
மட்டற்ற நன்மைகளால் நிரப்பி
மணவாளன் இயேசுவே ஆசீர்வதித்தருளும் - ஆசீர்வதியும்
2. ஆண்டு பலவாக வாழ்ந்திட
அன்பையே பண்பாகக் கொண்டிட - 2
ஆனந்தமே என்றும் கண்டிட
அருளை மாரியாய்ப் பொழியுமே
ஆதிமுதல் இறை அந்தம் வரை
அவராகி அக்கறை அடையும்வரை
ஆட்கொண்டு அன்போடு ஆசீர்வதித்தருளும்
- 2
No comments:
Post a Comment