அந்த சூரியன் அந்த சந்திரன்
இந்த பூலோகம் யாவும்
அந்த மழைத்துளி இந்த பனித்துளி
இயற்கை அழகு யாவும்
படைப்பே உந்தன் படைப்பே
அதை நினைத்து மனம் மகிழ்ந்து
உம்மை வாழ்த்திடுவேனே - 2
1. வான் முகிலும் வண்ண மலரும் விளையாடிடும்
தேன் துளியும் தென்றல் காற்றும் சுகம்
தந்திடும்
மலைச்சாரல் சொல்லிடும் பள்ளத்தாக்கும்
பாடிடும் - (2)
நீரே தேவன் நீரே தேவன்
எல்லாம் உம் கை வண்ணமே - ஓ - (2) - அந்த
2. மண்ணினாலே என்னையுமே படைத்தீரே நீர்
கண்மணி போல் கருத்துடன் காத்தீரே நீர்
விழுந்தாலும் எழுப்பி விட்டீர் அழுதாலும்
துடைத்து விட்டீர் - (2)
கண்ணீரை கண்ணீரை
இதயத் துடிப்பும் நீரே - ஓ - (2) - அந்த
- RAVI BHARATH
No comments:
Post a Comment