நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்

            நன்மைகள் ஏராளம் - 2

 

                        நம்புகிறேன் நம்புகிறேன்

                        நம்பத்தக்க தகப்பனே - 2

 

1.         மனிதரின் சூழ்ச்சியினின்று

            மறைத்துக் காத்துக்கொள்வீர் - 2

            நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுகள்

            அணுகாமல் காப்பாற்றுவீர் - 2

 

2.         என் பெலன் நீர்தானே

            கேடகமும் நீர்தானே

            சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்

            பாட்டினால் உம்மைத் துதிப்பேன் - நான்

 

3.         கானானிய பெண் ஒருத்தி

            கத்திக்கொண்டே பின்தொடர்ந்தாள்

            அம்மா உன் விசுவாசம் பெரியது என்று

            பாராட்டி புதுமை செய்தீர்

 

4.         கிருபை சூழ்ந்து கொள்ளும்

            உம் பேரன்பு பின் தொடரும்

            கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும்

            காலமெல்லாம் புகழ் பாடும்

 

5.         குருடன் பர்த்திமேயு

            கூப்பிட்டான் நம்பிக்கையோடு

            தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று

            ஜெபித்து பார்வை பெற்றான்

 

6.         நம்பி வந்த குஷ்டரோகியை

            நலமாக்கி அனுப்பினீரே

            மரித்த மகளையே உயிர் பெறச் செய்தீர்

            யவீர் உம்மை நம்பினதால்

 

7.         இக்கட்டு துன்ப வேளையில்

            காக்கும் அரணாநீர்

            பூரண சமாதானம் பூரண அமைதி

            தினம் தினம் நிரப்புகிறீர்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=8nGMaaWfKQg

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு