தூதர்கள் துதிக்கும் தூயவா தாலேலோ

தூதர்கள் துதிக்கும் தூயவா தாலேலோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

          தூதர்கள் துதிக்கும் தூயவா தாலேலோ

            தூங்குவாய் துதியின் தொனியில் தாலேலோ

            துங்கவனாய் தூயவனாய் மாந்தனாய் தோன்றினாய்

 

                        ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ

                        ஆரிரரோ ஆராரிரோ

                        ஆரிரரோ ஆராரிரோ

 

1.         மன்னரின் மகுடம் சூடாமல்

            மண்ணிலே வந்த ராஜா

            மானிடர் பாவம் போக்கவே

            மகிமையாய் வந்த ராஜா

 

2.         கந்தை பொதிந்த கோலமாய்

            காட்சி தந்தபோதும்

            காணிக்கை செலுத்தி வாழ்த்தினர்

            கீழ்தேச சாஸ்திரிகள்

 

3.         பாவம் நிறைந்த உலகிலே

            பரிசுத்த பாலனாய்

            பரலோக வாழ்க்கை தோன்றவே

            பாரில் வந்தவரே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு