இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
இயேசு வந்தார்
உலகத்தை மீட்க
ஏழை மனுக்குலமாய்
உலத்தில்
பிறந்தார்
இயேசு வந்தார்
உலகத்தை மீட்க
அவர்
பிறக்க வானம் தொனிக்க பூமி
ஆனந்தமானதே
அவர்
மரிக்க உயிர்த்தெழும்ப
பரலோகம் திறந்ததே
1. சாஸ்திரிகள்
மூவர் வந்து பணிந்து
கொண்டனரே
மேய்ப்பர்கள்
நடுவில் நற்செய்தி
தோன்றினதே
மாட்டு
தொழுவத்தில் ராஜா பிறந்தாரே
இருண்ட
பூமியில் வெளிச்சம்
உதித்ததே
2. அழகில்
சிறந்தவர் சௌந்தர்யமானவர்
பரிசுத்த
ஆவியினால் ஜெனிப்பிக்கப்பட்டவர்
இம்மானுவேல்
என்ற பெயரும் கொண்டவர்
எந்த காலத்திலும்
நம்மோடு இருப்பவர்
3. தாழ்மையின்
ரூபமாக ராஜா பிறந்தாரே
நம்மையும்
தாழ்மையாக வாழ
சொன்னாரே
இயேசுவின்
பிறப்பில் ஒரு
விடுதலையுண்டே
அதை நாம்
நாடினால் நமக்குள்
பிறப்பாரே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment