அதிசயமே
ஆச்சரியமே
ஆண்டவர் உம் வழி நடத்துதலே
நன்மையினாலும் கிருபையினாலும்
ஆசீர்வதிப்பவரே
1. அநித்தியமான வழிதனிலே
நடந்திடாமல் எம்மை காத்திடுமே
யேகோவாயீரே எம் தேவைகளை
நாளும் சந்திப்பீரே
2. பிலேயாமைப் போல உலகத்திற்காய்
உன்னத மேன்மையை இழந்திடாமல்
உலகத்தை வெறுத்து உம் வழியினிலே
சிலுவையை சுமக்கணுமே
No comments:
Post a Comment