ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்-எந்தன்

                        ஆத்தும் நேசரை புகழ்ந்திடுவேன்

                        அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே

                        நம் மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே

 

1.         மேலோக நாடெந்தன் சொந்தமதே

            இந்த பூலோக நாட்டமும் குறைகின்றதே

            மாயையில் மனம் இனி வைத்திடாமல்

            நேசர் காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன்

 

2.         நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை

            இயேசு நாதன் என் பக்கமாய் வந்தனரே

            பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே

            இந்த பாரதில் எனை

            வெற்றிச் சிறக்கச் செய்தே

 

3.         அற்புதமாம் அவர் நேசமது-எந்தன்

            பொற்பரன் சேவை என் சோகமது

            பற்பல கிருபைகள் பகருகின்றார்

            ஏழை கற்புடன் அவர் பணி செய்திடவே

 

4.         கானானின் கரையிதோ காண்கிறதே

            எந்தன் காதலன் தொனி காதில் கேட்கின்றதே

            காலம் இனி இல்லை உணர்ந்து கொண்டேன்

            விரைவாக என் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்

 

5.         அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர்

            தம் அழைப்பதில் விழிப்புடன்

            நிறுத்த வல்லோர்

            உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன்

            அங்கு பிழைத்திடவே அன்பர் சமூகமதில்

 

6.         ஜெபமதைக் கேட்டிடும் ஜீவனுள்ள தேவன்

            என் பிதா ஆனதால் ஆனந்தமே

            ஏறெடுப்போம் நம் இதயமதை-என்றும்

            மாறாமல் பதில் தரும் மன்னனிடம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு