அடுத்த ஊர்
செல்ல வேண்டும்
அதற்காகவே நான் இங்கு
தடுக்காதே என்னை என்றீரே
தேவைகள் அங்கும் உண்டு
நேரப் பங்கீடும் உண்டு
நிறுத்தாதே என்னை என்றீரே
கேட்டவர் கேட்டது போதும்
கேட்காதோர் எத்தனை பாரும்
வாருங்கள் அங்கு என்னுடன்
1. ஒன்றுமில்லாதோர் பங்கு
இயேசுவைப் பெற்றவர் பங்கு
பங்கைச் செய்யவே நாம் இங்கு
ஐந்து பத்தாக வேண்டும்
இரண்டு நான்காக வேண்டும்
பங்கைப் புதைத்தல் தவறு
2. படைத்தவர் சொல்லைக் கேட்டால்
அடுத்தவூர் அடுத்தவூர் என்று
கூட்டிக்கொண்டே போவாரே
பாத்திரம் நிரம்பி வழிய
பேராசீர்வாதங்களையும்
கொட்டிக் கொண்டேயிருப்பாரே
- எமில்
ஜெபசிங் (1940-2013)
No comments:
Post a Comment