புதுப்பாட்டுப் பாடுவேன் பொன்னகரிலே
புதுப்பாட்டுப்
பாடுவேன் பொன்னகரிலே
அண்ணல்
இயேசு தரிசனத்தில்
அகமகிழ்வேன் நான்
அங்கே
அகமகிழ்வேன் நான்
- 2
1. அன்பென்னும்
அரணிலே அவர் அளித்த
ஊற்றிலே
மூழ்கி
குளித்தவர் அங்கே
துதித்துப் பாடுவார்
- (2) - புதுப்பாட்டுப்
2. ஆவியின்
அபிசேகம் அச்சாரமாய்ப்
பெற்றவர்
அவருடைய
மகிமையில் மகிழ்ந்து
பாடுவார் - (2) - புதுப்பாட்டுப்
3. கிறிஸ்துவுடன்
ஆளுகைச் செய்ய
கிருபை பெற்ற சுத்தர்கள்
கிரீடம்
சூடும் நேரம் என்ன
கிருபானந்தமே
- (2) - புதுப்பாட்டுப்
4. பூவுலகில்
ஒருவராலும் பாடக்கூடாப்
பாட்டது
மீட்கப்பெற்றோர்
மாத்திரம் பாடும்
மீட்பின் கீதமே
- (2) - புதுப்பாட்டுப்
Comments
Post a Comment