பூர்வ நாட்களை நினைத்து பார்க்கின்றேன்
பூர்வ
நாட்களை நினைத்து
பார்க்கின்றேன்
செயல்கள்
எல்லாம் தியானிக்கிறேன்
எத்தனையோ
நன்மைகள் செய்தீரய்யா
நித்தம்
நன்றி சொல்லியே
துதிப்பேனையா
1. பாவியாக
இருந்த என்னை தேடி
வந்தீர்
உம் இரத்தத்தாலே
என் பாவம் போக்கி
விட்டீர்
கோடிக்கோடி
நன்றிகள்
பாடிப்
பாடி சொல்கிறேன்
நாடி
உந்தன் பாதமே தேடி
வருகிறேன்
2. கரம் பிடித்து
உம் சொந்தமாக்கி
கொண்டீர்
கவலை பயம்
ஏதுமின்றி
காத்துக்கொண்டீர்
3. உந்தன்
துதி பாடல் எந்தன்
நாவில் தந்தீர்
எந்த நாளும்
உம் பாதம் அமரச்
செய்தீர்
4. துன்பம்
என்னை சூழ்ந்து
கொண்ட வேளையிலே
இன்பம்
தரும் உறைவிடமாய்
வந்தீரே
5. நானும்
எந்தன் வீட்டாரும்
என்றென்றும்
உண்மையுடன்
உந்தன் பணி செய்திடுவோம்
6. உயிருள்ள
நாளெல்லாம் உம்மையே
நேசிப்போம்
வாழ்வோ
தாழ்வோ உம்மை தான்
பின் செல்லுவோம்
Comments
Post a Comment