பெருக்கத் திருக் கருணைப்பிதா அத்தனே
32. இராகம்: தோடி ஆதிதாளம்
(385)
பல்லவி
பெருக்கத்
திருக் கருணைப்பிதா
அத்தனே[1]!
அனுபல்லவி
நெருக்கப்படும்
எனை ஆள், நித்ய கர்த்தனே
- பெரு
சரணங்கள்
1. வல்லபம்[2] என்னுயிர்
காக்கும் வெகுமானம்;
நல்லவழி
சேர்க்குதுன்
உன்னத ஞானம் - பெரு
2. சுத்திகரிக்குதுன்
துய்ய பரிசுத்தம்;
பத்திரப்படுத்து
தெனை நீதிப்
பொருத்தம் - பெரு
3. சருவ
வியாபகம்
எனைச் சார்ந்திருக்குது
பொறுமை
சினத்தைப்
பொருந்தா
துருக்குது[3] - பெரு
4. ஆளுகை எனைத் தெரிந்துன்
அடி சேர்க்குது;
மீளவும்
உன் நன்மை செல்வம்
மிக ஆக்குது
- பெரு
5. நேசத்தின்
இரக்கம் என் பவத்தை நீக்குது;
மாசற்ற
உன் அன்பெனை
மகிழ்ச்சியாக்குது
- பெரு
6. உன்தன்
உண்மை மோட்ச வீட்டிற்குள்ளே
கூட்டுது;
சந்தேகம்
இல்லாமல் முடிதான்
சூட்டுது
- பெரு
- வே.சா
Comments
Post a Comment