நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
1. நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
நன்றியால் என்னுள்ளம்
பொங்கி வழிந்திடுதே
நாவினால் பாடிப்போற்ற
நாட்கள் போதுமோ
நல் பாதைதனில்
தொடர்ந்தென்னை நடத்தியதால்
பல்லவி
அன்பின் நேசரே நான் உம்மைப்
போற்றுவேன்
எண்ணில்லாத நன்மைகட்காய்
அல்லேலூயா பாடிடுவேன்
2. இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால்
சோதனையால் வெள்ளத்திலே
மாண்டிருப்பேன் நான்
நிந்தை துன்ப துயர நேரங்களிலும் உம்
நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர்
- அன்பின்
3. மீட்டுக் கொண்டீர் மானிடரின்
நடுவினின்று
நீதியின் கனியாய் மிமையில்
துலங்க
நற்குல திராட்சக்
கொடியாய் உம்மோடிணைந்து
நாதனே உம் தோட்டத்திலே நானும் நிலைக்க
- அன்பின்
4. மேலோகில் உம்மையல்லாது யாருண்டெனக்கு
பூலோகில் நீரல்லாது வேறாசையில்லையே
உம் ஆலோசனையின் படி என்னை நடத்தி
உந்தன் மகிமையிலே ஏற்றுக் கொள்வீரே - அன்பின்
5. ஓட்டம் முடித்த பரிசுத்தர் பரத்தில்
ஓய்ந்திருக்கின்றார்
தங்கள் அறைகளிலே
தாரணியில் நானும்
எந்தன் ஓட்டம் முடிக்க
தேகம் ஆத்மா ஆவியையும் ஒப்புவிக்கிறேன்
- அன்பின்
Comments
Post a Comment