கல்வாரி குருசண்டை ஏகி நின்றேன்

கல்வாரி குருசண்டை ஏகி நின்றேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   கல்வாரி குருசண்டை ஏகி நின்றேன்

                        திருரத்தம் புரண்டோடி பெரு வெள்ளமாய்

                        என்மீது பாய்ந்திட நான் சுத்தமாகினேன்

                        என் பாவம் நீங்கினதே

 

1.         மண்வாழ்வின் இன்பங்கள் வெறுத்துமே

            விண் வாழ்வின் நன்மைகள் நான் பெற்றிட

            உன்னத ஜீவனை என்னில் நீர் ஈந்ததால்

            உம்மை என்றும் துதிப்பேன்

            என்று உம்மை துதிப்பேன் - கல்வாரி

 

2.         உம் சித்தம் செய்து நான் ஜீவித்திட

            உம் பெலனால் என்னை தேற்றிடுமே

            ஆத்தும பாரம் நான் பெற்றென்றும் உமக்காய்

            ஊழியம் செய்திடவே

            தேவ அருள் செய்குவீர் - கல்வாரி

 

3.         உன்னத ஆவியை என்னில் ஊற்றும்

            இன்னிலம் தன்னில் நான் பிரகாசிக்க

            கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்

            உம்கரம் பற்றிடுவேன்

            உம்வழி நான் நடப்பேன்

 

4.         சிலுவை காட்சியை கண்டிடுவேன்

            அதை எண்ணி தினமும் வாழ்ந்திடுவேன்

            சாந்த சொருபியாம் ஏசுவின் சிலுவையில்

            சாய்ந்திடுவேன் நானுமே

            ஏசுவே என்றும் விடேன் - கல்வாரி

 

5.         என்னையே முற்றிலும் உம்கரத்தில்

            ஜீவபலியாக படைக்கிறேன்

            மன்னவா விண்மீது நீர் வரும் வேளையில்

            ஏழையான் காணப்பட

            நீர் என்னை காத்துக் கொள்வீர் - கல்வாரி

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே