பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்

பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

73.                       பாலர் ஞாயிறு கீதம்

 

          குழந்தைகள் வாயினாலும், பாலகர் வாயினாலும்

            துதி உண்டாகும்படி செய்தீர்' (சங். 8:2)

 

இராகம் - தேவ சேயின் பால்ய சேனையார் நாமே

 

                             பல்லவி

 

                   பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்

                        பாடி ஏசு நாமம் பணிந்து போற்றும்

 

                             அனுபல்லவி

 

            தாலந்தைப் புதைத்திடாமல்

            தாமதமே பண்ணிடாமல்

            ஞாலமீதிறங்கிவந்த சுவாமியேசு

            அன்பை எண்ணிப் - பாலர்

 

1.         பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம்

            பாலர் நேசர் பாதம் பணியக் கற்றோம்

                        பாரில் ஜோதி வீசுகின்ற

                        பரிசுத்த வேதம் கற்றோம்

                        ஊரிலெங்கும் கார்ட் பஞ்சாங்கம் ஓதும்

                        பாலியர் நேசன் கண்டோம் - பாலர்

 

2.         தேடி வந்தலையும் தேசிகருண்டு

            பாடி ஆர்ப்பரிக்கப் பாலர் பாட்டுண்டு.

                        கூடி வந்து ஆனந்திக்க

                        கூட்டப்பண்டிகையுமுண்டு

                        நாடி மீட்பர் பாதம் பாலர்

                        தேட எல்லா ஏதுமுண்டு - பாலர்

 

3.         இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே

            இன்னும் நித்தியமும் பாதுகாப்பாரே

                        அன்பின் சங்கம் இதைக் கொண்டு

                        ஆத்ம நேசர் செய்துவரும்

                        எண்ணி முடியா நன்மையை

                        ஏகமாக எண்ணிக் கொண்டு - பாலர்

 

4.         பெற்ற தாய்மாரே நீர் உற்றுக் கேளீரோ?

            சற்று எங்கள் சங்கம் நோக்கிப் பாரீரோ?

                        உங்கள் மேலுள்ள பொறுப்பைத்

                        தங்கள் மேலே தாங்கி வரும்

                        எங்கள் அன்பின் சங்கம் என்றும்

                        ஏகன் அன்பால் செழித்தோங்க - பாலர்

 

5.         குட்டி பேணிடாத கோனார் தானுண்டோ?

            நட்டி வருமென்று நன்குணராரோ?

                        பட்சமுள்ள மேய்ப்பர்களே

                        இஷ்டரான மெம்பர்களே

                        ரட்சகரின் கட்டளையை

                        இஷணமே நீர் மதித்து - பாலர்

 

6.         எத்தனையோ திரள் எந்தன் தேசத்தில்

            நித்தம் சாடுகிறார் நித்திய நரகில்

                        ரத்தம் சிந்தி மீட்ட நேசர்

                        சத்தமிட்டுக் கெஞ்சுகிறார்,

                        நித்திரை விட்டெழும்பாயோ?

                        நித்தியத்தை நீ நினைத்து - பாலர்

 

7.         வேண்டும் நன்மை செய்யும் மேன்மை சங்கத்தை

            தூண்டும் உந்தன் ஜெப தூபமதினால்,

                        மீண்டும் மிக்க ஆசையுடன்

                        மின்னும் வெள்ளி பொன் எடுத்து,

                        ஆண்டவரின் பாதம் வந்து

                        அன்பதாய்ப் படைப்பீராக - பாலர்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே