பார் ஐயா எளியேன் செய்
189. இராகம்: இந்துஸ்தான் டப்பா. ஆதிதாளம்.
பல்லவி
பார், ஐயா; எளியேன் செய் பவ வினை தீர், ஐயா.
சரணங்கள்
1. பார், ஐயா, உன் பதமே
கதி-ஏழைப்
பாவிமேல் கண்
பார்த்திரங்கி,-எனைப் - பார்
2. தீதினை உணர்ந்த
சோரனைப்[1]-பர
தீசிலே அன்று
சோக்கலையோ?-எனைப் - பார்
3. மாசிலா கிறிஸ் தேசுபரா,-உனைப்
வந்தடைந்தனன்;
தஞ்சம், என்றே-எனைப் - பார்
4. தஞ்சம் என்றுனைத்
தான் அடைந்தோர்-தமைத்
தள்ளிடேன்,
என்று சாற்றினையே;-எனைப் - பார்
5. பாவம் மாசிவப்
பாயினும்,-அதைப்
பஞ்செனப் செய்வேன்,
என்றனையே-எனைப் - பார்
6. தீயர்க்காய்ப்
பிணையாய் மரித்த-ஏசு
தேவனே, கருணா
கரனே,-எனைப் - பார்
- ஜாண்
பால்மர்
Comments
Post a Comment