கனிவின் கரங்கள் தினம் வழிநடத்தும்
கனிவின் கரங்கள் தினம் வழிநடத்தும்
நம் ஜீவிய காலமட்டும் - 2
பயம் வேண்டாம் இனி
புவி யாத்ரை கடந்திடுவோம்
- 2
1. பகலில் மேக ஸ்தம்பமாய்
இராத்திரியில் அக்கினி தூண்களாய்
- 2
தாக ஜனத்திற்காய் பிளந்தார் பாறையும்
ஜீவ மன்னா தந்தது யார் - 2
அந்த யெகோவாவை வாழ்த்திடுவோம் - கனிவின்
2. கசந்த மாரா வாழ்வினை மதுரமாக மாற்றியே - 2
தேனிலும் இனிய வாக்குகளாலே
தேற்றி நம்மை ஆற்றிடுவார்
- 2
அந்த நல் தேவனை வாழ்த்திடுவோம்
- கனிவின்
3. யோர்தானை போன்ற துன்பமும்
துயரமும் வந்தபோதிலும் - 2
தேவ புயங்களின்
பெலமதினால்
சோர்வில்லாமல் கடந்து வந்தோம்
- 2
வல்ல நல் தேவனை வாழ்த்திடுவோம்
- கனிவின்
4. சத்துரு சேனை எழும்பியே
நமக்கெதிராய்
வந்தாலும் - 2
நமக்காய் யுத்தம் செய்திடும்
கர்த்தர்
சேனையதிபனாய்
முன் செல்கின்றார் - 2
அவரின் கரங்களைப் பற்றி கொள்வோம்
- கனிவின்
5. ஜீவியம் என்னும் தோணியில்
பாயும் அலைகளின் ஓளங்களில் - 2
மாயமான வீண் பாரங்களும்
புயலால் மோதினால் என்ன செய்வாய்
பயப்படாதே இயேசுவைப் பார் - கனிவின்
Comments
Post a Comment