(இராகம்: சுராங்கனி)
பாலன் பாலனே இயேசு பாலனே
இயேசு பாலனே பிறந்து விட்டாரே
பாலனுக்கே
ஜே ஜே இயேசுவுக்கே ஜே
இயேசு பாலகனே பிறந்து விட்டாரே
1. பெத்தலகேம் ஊரில்
உள்ள சத்திரத்திலே
கர்த்தன் இயேசு பாலகனாய் அவதரித்தாரே
விண்ணவரும்
மண்ணவரும் போற்றித் துதித்திட
தூயாதி தூயவரை பணிந்திடுவோமே
2. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே
தூயன் இயேசுவின் பாதம் பணிந்திடுவோமே
அவர் நாமம் பூமியெங்கும் பறைசாற்றிட
அந்த உன்னத தேவனை உயர்த்திடுவோமே
3. மனுக்குலம் மேன்மையடைய
வந்த பாலனை
மலர்ப்பாதம்
தொட்டு வணங்கிடுவோமே
மலர்கின்ற புதுவருட
நாட்களிலும்
நன்மை வேண்டி நாதனை
புகழ்ந்து போற்றுவோம்
No comments:
Post a Comment