பாவ நாசக ரேசு பாடுபட் டுயிர்த்தார்
220.
“சீவநாயகர்
ஈதோ சிசுவாக” என்னும் மெட்டு
பல்லவி
பாவ நாசக
ரேசு பாடுபட் டுயிர்த்தார்
பாதாளம்
விட்டேறிப் பார்த்துக் கேகிட
அனுபல்லவி
தேவசமுகம் கண்டு சிறப்பாய் வீற்றிட
- பாவ
சரணங்கள்
1. பாவிகளுக் காக பரனி
டத்திலே
பரிந்துபேசிப் பாக்யம் பகிர்ந்த ளிக்கவே
விரைந்து
வாரும் போவோம், விமலனைப் பார்க்க - பாவ
2. எல்லாம்
செயங் கொண்ட ஏக சக்ராதிபதி
நல்லார் மனதைத் தேற்ற நாதன் உயிர்த்தாரே
பொல்லாததை எல்லாம் மீட்கப் பொறுமையா
யிருந்து - பாவ
3. மண்ணிலிருந் தெழுந்து விண்ணுக்குச் செல்ல
மகிமையான
தேவன் செயமாக உயிர்த்தார்
ஆ
என் நேசா நீயும் ஆயத்த மாகு - பாவ
4. சாவின் பள்ளத்தாக்கைத் தாமாக செயித்து
பேயின்
தலையை வென்ற பிதாசுதன் உயிர்த்தார்
பூவின்
மனுடர்க் கெல்லாம் புண்ணிய மளித்திட - பாவ
5. வானமண்டல வீட்டின் லோகத்திற்கு வர
கோனார் இயேசுராசர் ஆயத்தமாயிருக்கிறார்
அதால் நேசா நீயும் ஆயத்த மாகாயோ - பாவ
6. அதோ
பார்க்கும் யாரும் பயந்து நடுங்கிட
இதோ
சீக்கிரம் இயேசு வருவேன் என்கிறார்
அதால் பாவி அவர் அருகில் ஓடிவா - பாவ
Comments
Post a Comment