பார்ப்பேனே என் நேசரை நான்

பார்ப்பேனே என் நேசரை நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

379. 

 

                             பல்லவி

 

                   பார்ப்பேனே என் நேசரை நான்,

                   ஆர்ப்பரிப்பேன் கூடி யந்நாள்.

 

                             அனுபல்லவி

 

                        தீர்த்தார் என் கண்ணீரையெல்லாம்

                        சாற்றுவேன் நான் துதியே, துதியே. - பார்ப்பேனே

 

                             சரணங்கள்

 

1.         பாரில் என்தன் பாவம் தீர்த்தார்,

            பரத்தில் என்தன் ஆவல் தீர்ப்பார்,

            அகத்திலே சந்தோசமளித்தார்,

            இகத்தி லென்றும் துதியே, துதியே, - பார்ப்பேனே

 

2.         ஆயிரங்களிற் சிறந்தோர்,

            ஆத்துமாவின் நேசரவர்,

            ஆபத்திலென் தோழனவர்,

            நாமத்திற்கே துதியே, துதியே. - பார்ப்பேனே

 

3.         எண்ணிறந்த தூதர் கூட்டம்

            விண்ணினின்று போற்றும் நாளில்,

            அண்ணல் இயேசின் அடி பணிந்து,

            நின்று சொல்வேன் துதியே, துதியே. - பார்ப்பேனே

 

4.         மண்ணின் சாயல் மாறி யானும்,

            மகிமை யேறி மாசற்றோனாய்,

            மன்னனோடு மணவறையில்,

            மகிழ்வேன் என்றும் துதியே, துதியே. - பார்ப்பேனே

 

 

- இரத்தினம் பரதேசியார், திருநெல்வேலி.

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே