பார்ப்பேனே என் நேசரை நான்
379.
பல்லவி
பார்ப்பேனே என் நேசரை நான்,
ஆர்ப்பரிப்பேன்
கூடி யந்நாள்.
அனுபல்லவி
தீர்த்தார் என் கண்ணீரையெல்லாம்
சாற்றுவேன் நான் துதியே, துதியே. - பார்ப்பேனே
சரணங்கள்
1. பாரில் என்தன்
பாவம் தீர்த்தார்,
பரத்தில் என்தன்
ஆவல் தீர்ப்பார்,
அகத்திலே சந்தோசமளித்தார்,
இகத்தி லென்றும் துதியே, துதியே, - பார்ப்பேனே
2. ஆயிரங்களிற் சிறந்தோர்,
ஆத்துமாவின் நேசரவர்,
ஆபத்திலென்
தோழனவர்,
நாமத்திற்கே
துதியே, துதியே. - பார்ப்பேனே
3. எண்ணிறந்த தூதர்
கூட்டம்
விண்ணினின்று
போற்றும் நாளில்,
அண்ணல் இயேசின்
அடி பணிந்து,
நின்று சொல்வேன் துதியே,
துதியே. - பார்ப்பேனே
4. மண்ணின் சாயல் மாறி யானும்,
மகிமை யேறி
மாசற்றோனாய்,
மன்னனோடு மணவறையில்,
மகிழ்வேன் என்றும் துதியே, துதியே. - பார்ப்பேனே
- இரத்தினம் பரதேசியார், திருநெல்வேலி.
YouTube Link
Comments
Post a Comment