கருணையின் தேவா கனிதரும் மூவா
பல்லவி
கருணையின் தேவா! கனிதரும் மூவா!
கர்த்தா! உமக்கே ஸ்தோத்திரம்
அனுபல்லவி
பரலோகனே - பவ நாசனே
பரனே
- கரனே - உமை
கண்டு
மகிழ்ந்திடவே எமக்காசை
கருணா நிதியே காத்திடுவாயே
- கருணையின்
2. வல்லமை ஞானம் நீதி நிறைந்த
வள்ளலே உமக்கே ஸ்தோத்திரம் - 2
வரந்தாருமே - வந்து காருமே - (2)
வந்தோம் - தந்தோம் - உந்தன்
சுந்தரக்
கரத்தினில் மைந்தர்களெமையே
வருவாய் - தருவாய் அருள் மாரியை யிப்போ - கருணையின்
3. பலியாக உமையே பாவிக்காய்
ஈந்த
பரனே உமக்கே ஸ்தோத்திரம் - 2
புறம்பானீரோ - புவிமீதிலே - (2)
புகழ்வேன்
- மகிழ்வேன் - உந்தன்
பொற்பாதம்
பணிந்துமே ஆனந்தக் களிப்புடன்
பொல்லா
உலகின் இன்பத்தை வெறுத்து - (2) - கருணையின்
4. நித்ய மணாளா! நிர்மல நாதா!
நேசரே உமக்கே ஸ்தோத்திரம் - 2
நினையா நேரம் வருவீரையா - (2)
நிதமே - விழப்பாய் - உமைச்
சந்திக்க
ஆயத்த மாயிருந்திடவே
நேசா
ஜெபிக்க ஏவுதல் தாரும் - (2) - கருணையின்
Comments
Post a Comment