மாறிடும் எல்லாம் மாறிடும் நம் தேவனால்

மாறிடும் எல்லாம் மாறிடும் நம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

தெ.இ.தி. திருநெல்வேலி திருமண்டல - சட்டவாக்கியப் பாடல் - 2024

 

ஏசாயா 44:3 

தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும்,

வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்;

உன் சந்ததியின்மேல் என் ஆவியையும்,

உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.

 

 

          மாறிடும் எல்லாம் மாறிடும் - நம்

            தேவனால் எல்லாம் மாறிடும்

            மாற்றுவார் உந்தன் வாழ்க்கையை - 2

 

                        தாகமாய் உள்ளவருக்குத் தண்ணீரை

                        ஊற்றிடுவார் ஊற்றிடுவார் ஊற்றிடுவார்

                        வறண்ட நிலத்தில் ஆறுகளை ஓடச் செய்வார்

                        சந்ததி மேல் பரிசுத்த ஆவியை ஊற்றிடுவார்

                        வழித் தோன்றலுக்கு ஆசிமழை பொழிந்திடுவார்

 

1.         செழிப்பான புது வாழ்வு

            அருளிச் செய்வார் அருளிச் செய்வார்

            கானானின் ஆசியை

            பெருகச் செய்வார் பெருகச் செய்வார் - 2

                        அடிமை என பெயரில்லை

                        இஸ்ரவேல் என்று பெயர் பெறுவாய் - 2

 

2.         பரத்திலிருந்து புது பெலன்

            அடையச் செய்வார் அடையச் செய்வார்

            ஆவியானவர் உனக்குள்ளே

            நடத்திடுவார் நடத்திடுவார் - 2

                        எருசலேம் யூதேயா சமாரியா

                        உலகமெங்கும் சாட்சியாய் - 2

 

3.         உன்கரம் பிடித்தவர் நம் இயேசு

            நம் இயேசு நம் இயேசு

            உன்னோடிருப்பார் எந்நாளும்

            எந்நாளும் எந்நாளும் - 2

                        தலைமுறை தலைமுறை வருடங்களாய்

                        தழைக்கச் செய்வார் வருஷங்களை - 2

 

ஏசாயா 44:3 

தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும்,

வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்;

உன் சந்ததியின்மேல் என் ஆவியையும்,

உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு