கன்னித்தாய்
மரியாள் வரவேற்றாள்
தெய்வமகன்
சிப்பியவள்
பொற்குடத்தில்
முத்தெனவே
அவதரித்தார்
ஆவியினால்
ஆண்டவனை
அவள்
சுமக்கக்
கொடுத்து வைத்தாள்!
விண்ணுலகம்
மகிழ்ந்து பண்பாடும்
மண்ணுலகம்
வியந்து கொண்டாடும்
மனங்களில்
அமைதி வென்றாளும்
மனிதரில்
பாசம் உண்டாகும்
1. கிருபையினால்
மா தேவன் - இரக்கம்
பெற்றாள்
பணிந்ததினால்
மகிமையின்
கர்த்தனிடம்
வலிமையின்
தேவனிடம்
பலவான்கள்
தலைகுனியும்
- இனி
கனவான்கள்
கைவிரியும்
2. தெய்வத்தின்
நல் விருப்பம்
- என்றும்
தெய்வமகன்
விரும்பும் அப்பம்
ஜீவனின் அதிபதிதான்
ஜீவனைக் கொடுக்க
வந்தார்
பாவத்தைத்
தொலைக்க வந்தார்
- வல்ல
சாத்தானை
ஜெயிக்க வந்தார்
3. மானுட
அவதாரம் - ஒன்றே
ஆண்டவரின்
திரு விருப்பம்
தாழ்ந்தவர்
உயர்ந்திடுவார்
பசித்தவர்
விருந்துண்பார்
புதியதோர்
சமுதாயம் - இனி
மலர்ந்திடும்
அவனியெங்கும்
https://www.youtube.com/watch?v=jWB6U9jLpgM
No comments:
Post a Comment