மேய்ப்பர்கள் இரவில் வயல்வெளிகளில்

மேய்ப்பர்கள் இரவில் வயல்வெளிகளில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          மேய்ப்பர்கள் இரவில் வயல்வெளிகளில்

            மந்தையை காத்திடவே

            வானத்தில் தூதர்கள் சந்தோஷ செய்தியை

            மேய்ப்பர்க்கு அறிவித்தார்

 

                        எல்லா ஜனத்திற்கும் நற்செய்தியாம்

                        கர்த்தராம் ரட்சகர் பிறந்துள்ளார்

                        உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம்

                        மானிடர் மேலே அன்பு என்றென்றும் உண்டாகவே

 

2.         விண்ணகம் துறந்து மண்ணகம் பிறந்த

            மன்னவன் இயேசுவினால்

            என்றென்றும் நிறைந்து தங்கிடுமே அங்கு

            உன்னதத்தில் மகிமை - எல்லா

 

3.         பாவத்தால் சாபத்தால் சமாதானமின்றி

            வாடிடும் மாந்தர்கட்கு

            ஆறுதல் தந்திடும் தேறுதல் வார்த்தையாம்

            பூமியில் சமாதானம் - எல்லா

 

4.         ஏழைகள் திக்கற்றோர் அனாதை வறியோர்

            ஆதரவேதுமின்றி

            அலையும் வேளையில் தூதரின் நல்வார்த்தை

            மானிடர் மேலே அன்பு - எல்லா

 

5.         தூதர்கள் செய்தியை கேட்டிட்ட ஆயர்கள்

            பெத்லகேம் நகர் சென்று

            அற்புத பாலனாம் இயேசுவை கண்டனர்

            பணிந்து வணங்கினர்

 

                        எல்லா ஜனத்திற்கும் சந்தோஷமாம்

                        நற்செய்தி கூறிட சென்றிடுவோம்

                        இயேசுவின் பாதத்திலே ஜனங்கள் எல்லாருமே

                        பணிந்து வணங்கியே பாக்கியம் அடையட்டும்

 

https://www.youtube.com/watch?v=CBW2-q9-Y5A

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு