இராஜாதி ராஜன் உயிர்த்தெழுந்தார்

இராஜாதி ராஜன் உயிர்த்தெழுந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          இராஜாதி ராஜன் உயிர்த்தெழுந்தார்

            அடிமையின் விலங்கினை உடைத்தெரிந்தார்

            மரணத்தை வென்றார் மகத்துவம் அடைந்தார்

            விடுதலைக் கிடைத்திட உயிர்த்தெழுந்தார்

 

                        எழுந்தார் எழுந்தார் உயிர்த்தெழுந்தார்

                        இறைமகன் இயேசு உயிர்த்தெழுந்தார் - இராஜாதி

 

1.         ஒரு நாள் மறைவேன் மீண்டும் உயிர்ப்பேன்

            புதுயுகம் படைப்பேன் என்றார் - 2

            இருளகன்றனவே ... அல்லேலூயா

            ஒளி பிறந்தனவே ... அல்லேலூயா

            பாறை பிளந்தது, கட்டுகள் அவிழ்ந்தது

            கல்லறையிருந்து உயிர்த்தெழுந்தார் - எழுந்தார்

 

2.         மனுமகன் உதிரம் பாவம் போக்கும்

            உயிர்களை காக்கும் என்றார் - 2

            இறைவாக்கினரும் ... அல்லேலூயா,

            மறைவல்லுனரும் ... அல்லேலூயா

            அறிவித்த அனைத்தையும் நிறைவேற்றிடவே

            பிறந்து இறந்து உயிர்த்தெழுந்தார் - எழுந்தார்

 

3.         எனது கைகள் நீங்கள் என்றார்,

            புதுமுகம் புனைவீர் என்றார் - 2

            தீமை தகர்த்திடவே ... அல்லேலூயா,

            அருள் நிறைந்திடவே ...அல்லேலூயா

            பகைமைகள் ஒழிந்திட, சுயநலம் மாய்த்திட

            புதுயுகம் படைக்க நம்மை அழைத்தார் - எழுந்தார்

 

 

https://www.youtube.com/watch?v=TScvFr4dHik

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு