என் இயேசு
உயிர்த்தெழுந்தார்
சாத்தானை
ஜெயித்தெழுந்தார்
என் பாவம்
சுமந்து
என்னை
மீட்டவரை
எந்நாளும்
நான் துதிப்பேன்
1. வானமும்
பூமியும் யாவையும்
படைத்தவர்
வல்இயேசு
நாதனாய் மண்ணிலே
பிறந்தவர்
அலகைதனை
வென்று உலகத்தை
இரட்சிக்க
அருள்வடிவாய்
இன்று உயிர்த்தெழுந்தாரே
- என் இயேசு
2. பாவத்தை
சுமந்து பாடுகள்
அடைந்து
பாவியாய்
சிலுவையில் பலியானார்
எனக்காய்
மரணத்தை
வென்று மாபெரும்
தேவனும்
மகிமையாய்
உலகில் உயிர்த்தெழுந்தாரே
- என் இயேசு
3. குருசினில்
தொங்கியே
குருதியும் வடித்த
குருஇயேசு
சுவாமி நமக்காக
மரித்த
பரிசுத்த
பாதையும் பரலோக
வாழ்வையும்
அருள்செய்ய
எழுந்தார் அகமகிழ்ந்திடுவோம்
- என் இயேசு
No comments:
Post a Comment