கல்வாரி என்னும் தோட்டத்திலே

கல்வாரி என்னும் தோட்டத்திலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        கல்வாரி என்னும் தோட்டத்திலே

                   எம் கர்த்தர் தொங்கும் மரத்தினிலே

                        ஏழு பூக்கள் பூத்ததைய்யா  

                        அது ஜீவ பூக்கள் ஆனதைய்யா (2)

 

1.         ஆணிகள் அடித்து வதைத்தவர்க்கு - உம்

            மேனியில் வேதனை கொடுத்தவர்க்கு - 2

            பிதாவே இவர்களை மன்னியும் என்று (2)

            முதலாம் மலர்ந்த மன்னிப்பு - கல்வாரி

 

2.         குற்றம் புரிந்த ஒரு கள்ளனுக்கு அவன்

            சத்தம் அறிந்த அன்பு மனம் உமக்கு - 2

            இன்று பரதேசில் இருப்பாய் என்று (2)

            இரக்கத்தால் மலர்ந்த இரட்சிப்பு (சிலுவையில்) - கல்வாரி

 

3.         ஈன்றெடுத்த அன்னை துடிக்க கண்டு உம்

            இதயத்திலே பாச உணர்வு கொண்டு - 2

            ஸ்திரியே அதோ உன் மகனென்று (2)

            பாசத்தால் மலர்ந்த பராமரிப்பு (தாய்) - கல்வாரி

 

4.         கைவிட்ட பட்டோரை காக்க வந்தீர் மாந்தர்

            கண்ணீர் யாவையும் துடைக்க வந்தீர் - 2

            என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று (2)

            தனிமையில் மலர்ந்த தவிப்பு (சிலுவையில்) - கல்வாரி

 

5.         ஜீவ தண்ணீர் வரும் கன்மலையே மாந்தர்

            பாவத்தை போக்கிடும் உம் நிலையே - 2

            தாகமாய் இருக்கிறேன் என்றுரைத்து (2)

            ஆத்ம தாகத்தால் மலர்ந்த களைப்பு (சிலுவையில்) - கல்வாரி

 

6.         தொடர்ந்தது பாவம் உலகத்தினிலே

            இரத்தம் வடிந்தது இரட்சிக்க சிலுவையிலே - 2

            முடிந்தது எல்லாம் என்றுரைத்து (2)

            முழுமையாய் மலர்ந்த பூரிப்பு (சிலுவையில்) - கல்வாரி

 

7.         பாவியை மீட்க வந்தவரே தூய

            தேவனின் ஆவியை தந்தவரே - 2

            உம் கரத்தினில் என் ஆவியை தந்துவிட்டேன் என்று (2)

            உன்னதமாய் மலர்ந்த ஒப்புவிப்பு - கல்வாரி

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு