கொல்கதா என்றாலே கொலை நடுங்குது

கொல்கதா என்றாலே கொலை நடுங்குது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கொல்கதா என்றாலே கொலை நடுங்குது

                        மனம் குமுறுது மெய் சிலிர்த்திடுது

 

                        (எப்படி தான் மனித கரங்களும்

                        புனித தலையை கொட்டத் துணிந்ததோ

                        அப்படியே அவர் கன்னங்களில் அறைய

                        எப்படித்தான் பாவ கரங்கள் எழுந்ததோ

                        அய்யோ கதறுகின்றாரே அவர் கன்னங்கள் சிவந்திடவே)

 

1.         மரியாள் முத்தமிட்ட மாசற்ற கால்கள்

            பெருதொரு ஆணியினால் குருசில் என்றதே

            வா என்ற அழைத்த அன்பின் கரங்கள் நோகவே

            பெரிதொரு ஆணியால் குருசி என்றதே

            அப்பா அங்கே குருசினில் பாவியை நினைத்தே

            இப்பாவியை நினைத்தீர்

 

                        (நிலமெல்லாம் நின் இரத்தம் கொட்டி விட்டதே

                        எலும்புகளெல்லாம் எண்ணத் தெரியுதே

                        இடும்பையின் கடலிலே இறங்கி விட்டீர் இயேசுவே

                        கொடும்பாவி என்னை தீக்கடலில் மீட்கவே

                        என் பாவம் மாபெரிது மன்னியும் இயேசு நாதா)

 

2.         புசியாது நின் வயிறு ஒட்டிப் போனதே

            பசியினால் நின் உடல் வாடி வதங்கிற்றே

            அடியினால் நின் தேகம் உருகுலைந்ததே

            வடிவது மாறி உடல் கோரமானதே

            என்னழகே என்னாலே நின் அழகிழந்தீரே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு