சிலுவையில் வார்த்தை ஏழு மொழிந்தார் இயேசு

சிலுவையில் வார்த்தை ஏழு மொழிந்தார் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   சிலுவையில் வார்த்தை எழு மொழிந்தார் இயேசு

                        சிந்தையில் ஆத்ம பாரம் பெருகிடவே

                        அவ்வேழு பொன்மொழிகள் கேட்கும் நேரம் - 2

                        பாவ வழிவிட்டவர் பாதத்தில் வா - 2

 

1.         பிதாவே இவர்களுக்கு மன்னியுங்கள்

            தாங்கள் செய்வது அதை அறியார்களே

            என்று முதல் வார்த்தை சொல்லியவர் - 2

            குருசினில் தொங்கி உந்தன் பாவம் தீர்த்தார் - 2

 

2.         இன்றைக்கு என்னுடன் நீ பரதீசினில்

            இருப்பாய் என்று சொன்னார் கள்வனையே

            கள்ளனின் பாவம் தீர்த்த இயேசு இன்று - 2

            உந்தனின் பாவக்கரை நீக்கிடுவார் - 2

 

3.         தாய்க்கு மகன்தனை கொடுத்த தேவன்

            தம் அன்பு சீஷனுக்கும் தாயளித்தார்

            ஐங்காயம் ஏற்றுக்கொண்டு தொங்கும் போதும் - 2

            பிறர்நலம் வாழத்தானே எண்ணங்கொண்டார் - 2

 

4.         தாய்முகம் பார்த்து கதரும் பிள்ளை போலே

            பிதாவிடம் முறையிட்ட ஆட்டுக்குட்டி

            ஏலி ஏலி லாமா சபக்தானி - 2

            என் தேவா ஏன் என்னை கைவிட்டீர் - 2

 

5.         தாகமாய் இருக்கிறேன் என்று சொன்னார்

            தாங்காத வேதனையை உடலில் கொண்டு

            காடியில் தொய்க்கபட்ட காளானையும் - 2

            கயவர்கள் தண்டில் மாட்டி நீட்டினரே- 2

 

6.         முடிந்தது என்று சொல்லி தலையை சாய்த்தார்

            முன்குறித்திட்ட வேளை வந்திடவே

            பரிகாசம் நிந்தை எல்லாம் ஏற்றுக்கொண்ட - 2

            பரிசுத்தர் இரத்தம் சிந்தி பாடுப்பட்டார் - 2

 

7.         பிதாவே உம்முடைய கைகளிலென்

            ஆவியை ஒப்புவிக்கிறேன் எனவே

            என்று மகா சத்தமிட்டு சொல்லி - 2

            ஜீவனை விட்டுவிட்டார் நமக்காகவே - 2

 

- Ratha Benny

 

https://www.youtube.com/watch?v=jMdg6nX8IEk

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு