மரி மரி பாலா மங்கள சீலா
86. இராகம்: மோகனம். தாளம்: ஆதி.
பரி. மத்தியாவின் திருநாள் - பிப்ருவரி 2ஆம் நாள்
“சாலேமின் இராசா சங்கையின்” - என்ற மெட்டு
கண்ணிகள்
1. மரி
மரி பாலா, மங்கள
சீலா,
மனதில்
வாருமேன், மனதில்
வாருமேன் - இன்று
மத்தியா வின்திரு நாளினில் வந்தோம்,
மகிழ்ந்து
பாருமேன்.
2. எழுபது
சீடரில் இவனொரு சீடனாய்,
எண்ணியிருந்தோம்,
எண்ணியிருந்தோம்
- அப்போம்
ஏற்பட்ட
சீட்டினால், இந்தப்
பதவிக்கு,
இசைந்தவனானான்
3. பாதகம்
செய்து நற்
பதவியை இழந்த,
பாவி
யூதாசின்,
பாவி யூதாசின்
- தானம்
மாதவர்
போற்றும் இம் மத்யாவுக்
கேற்பட்ட,
மகிமை
என் சொல்வோம்
4. ஐம்புல ஆசையை,
மாமிச இச்சையை,
அடக்கியாண்
டிடும், அடக்கியாண்டிடும்
- என்று
ஆவலுடன்
சுவிசேட மறை
சொல்லி,
அறைந்து
கூவினான்.
5. கல்லெறி பட்டு
எருசலேம் விட்டுக்
கப்ப தோக்கியா,
கப்பதோக்கியா
- ஏகி
கர்த்தனைப்
போல சிலுவை யறையுண்டு,
கண்ணை
மூடினான்.
6. குருவபிசேடம்
செய்யத் தெரிந்திடக்,
கோமான் கற்பனையோ,
கோமான் கற்பனையோ?
- இந்தக்
குவல யத்தவர்
மாதிரி பார்த்திட,
குறித்த
மா முனியோ?
- S. உவால்டர்
கவிராயர்,
தென்மலை.
Comments
Post a Comment