மலைகள் விலகினாலும் பர்வதங்கள்
மலைகள்
விலகினாலும் பர்வதங்கள்
நிலை பெயர்ந்தாலும்
கிருபை
விலகாது சமாதானம்
நிலை பெயராது
- 2
மலைகள்
விலகினாலும்...
கிருபை
விலகாதைய்யா -
(2)
இயேசைய்யா
உம்
கிருபை
விலகாதைய்யா -
(2) - மலைகள்
1. கோபம் கொள்வதில்லை
என்று வாக்குரைத்தீர்
கடிந்து
கொள்வதில்லை என்று
ஆணையிட்டீர் (என்மேல்)
- 2
பாவங்களை
மன்னித்தீர் அக்கிரமங்கள்
எண்ணுவதில்லை
- (2)
இயேசு எனக்காய்
பலியானதனால்
- (2) - கிருபை
2. நீதியினால்
நான் ஸ்திரப்படுவேன்
கொடுமைக்கு
நான் தூரமாவேன்
- 2
பயமில்லாதிருப்பேன்
திகிலுக்கு
தூரமாவேன்
- (2)
எதுவும்
என்னை அணுகுவதில்லை
- (2) - கிருபை
3. எனக்கு
விரோதமாய் எழும்பும்
ஆயுதம்
வாய்க்காதே
போகும் என்று வாக்களித்தீர் - 2
எனக்கு
விரோதமாய் நியாயத்தில்
எழும்பும் நாவை
- (2)
குற்றப்படும்படி
செய்திடுவீர்
- (2) - கிருபை
மனிதர்கள்
விலகினாலும் நம்பினோர்
கைவிரித்தாலும்
கிருபை
விலகாது சமாதானம்
நிலைபெயராது
- 2
மலைகள்
விலகினாலும்...
Comments
Post a Comment