மங்கள மணாளா மன்றல் ஆசி தா
469.
இராகம்: ஆனந்தபைரவி ஆதி
தாளம்
பல்லவி
மங்கள மணாளா!
மன்றல் ஆசி தா;
இம்மண மக்கள்
இங்கிதமாய்[1]
வாழ அருள் துங்கா!
வளமாய்
அனுபல்லவி
சங்கு
நாதமே முழங்க,
எங்கும் யேசு
பேர் விளங்க
சந்ததம்;
துணையீந்து
பெந்தமாய்;
காத்து ரட்சை
சொந்தமாய்;
தயை நல்கி
விந்தையாய் வாழ்ந்திட
நாளும் - மங்கள
சரணங்கள்
தம்பதிகளாம்
இவர்கள் உம்பர்[2] போல்
நீடுழிவாழ்ந்து
தாட்சியின்றியே
ஜெபங்கள் மாட்சியுடனே
அம்பர[3] வாசிகளென தம்பிரானடி
வணங்கி
அந்தி
சந்தி மத்தியானம்
வந்தனை செய்து
கம்பம்[4] போல்
நிலைத்து வாழ எம்பரா அனுதினமும்
காருமே; உன்
கிருபை
கூருமே; ஞானம்
கல்வி
தாருமே
அடியாரைக் கண்
பாருமே, பாருமே என்றும்
- மங்கள
- ஈசாக்கு ஞானமுத்து
Comments
Post a Comment