28 April 2025

நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்

நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1.       நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்

            நன்றியால் என்னுள்ளம் பொங்கி வழிந்திடுதே

            நாவினால் பாடிப்போற்ற நாட்கள் போதுமோ

            நல் பாதைதனில் தொடர்ந்தென்னை நடத்தியதால்

 

                                    பல்லவி

 

                        அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன்

                        எண்ணில்லாத நன்மைகட்காய்

                        அல்லேலூயா பாடிடுவேன்

 

2.         இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால்

            சோதனையால் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான்

            நிந்தை துன்ப துயர நேரங்களிலும் உம்

            நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் - அன்பின்

 

3.         மீட்டுக் கொண்டீர் மானிடரின் நடுவினின்று

            நீதியின் கனியாய் மிமையில் துலங்க

            நற்குல திராட்சக் கொடியாய் உம்மோடிணைந்து

            நாதனே உம் தோட்டத்திலே நானும் நிலைக்க - அன்பின்

 

4.         மேலோகில் உம்மையல்லாது யாருண்டெனக்கு

            பூலோகில் நீரல்லாது வேறாசையில்லையே

            உம் ஆலோசனையின் படி என்னை நடத்தி

            உந்தன் மகிமையிலே ஏற்றுக் கொள்வீரே - அன்பின்

 

5.         ஓட்டம் முடித்த பரிசுத்தர் பரத்தில்

            ஓய்ந்திருக்கின்றார் தங்கள் அறைகளிலே

            தாரணியில் நானும் எந்தன் ஓட்டம் முடிக்க

            தேகம் ஆத்மா ஆவியையும் ஒப்புவிக்கிறேன் - அன்பின்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

நிதமும் பாடி போற்றுவோம்

நிதமும் பாடி போற்றுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நிதமும் பாடி போற்றுவோம்

                        இதயம் பொங்கிப் பூரிப்பாய் நம் தேவனை

 

1.         விண்ணவன் நம்மோடிருந்தாரே - இரு

            கண்ணின் மணிபோல் காத்தாரே

            எண்ணில்லா நன்மைகள் பல ஈந்தாரே

            பண்போடு பணிந்திடுவோம் - நிதமும்

 

2.         வந்தார் பூவில் நம்மை மீட்க தம்மை

            தந்தார் பலியாய் குருசினில்

            ஈந்தார் சுத்த ஆவிதனை

            சிந்தித்துப் பணிந்திடுவோம் - நிதமும்

 

3.         அந்த காரத்தில் ஆழ்ந்திருந்தோம் - தம்       

            விந்தையான ஒளி காட்டினார்

            சொந்த ஜனமாகத் தெரிந்தெடுத்தாரே

            சந்ததம் பணிந்திடுவோம் - நிதமும்

 

4.         வாழ்வினிலே பல வீழ்ச்சியுற்றோம் -நாம்

            ஆழ்ந்திடாமல் கை தூக்கினார்

            சூழ்ந்திடும் சோதனை யாவும் ஜெயித்திட

            தாழ்ந்துமே பணிந்திடுவோம் - நிதமும்

 

5.         சத்துரு செய்த சதி மோசம் அவை

            அத்தனையும் தூரப் போக்கினார்

            சுத்தர்களாய் நாம் சோபித்திலங்கிட

            நித்தமும் பணிந்திடுவோம் - நிதமும்

 

6.         தொனித்திடுதே சத்தம் தேசமெங்கும் இயேசு

            சபைதனை சேர்க்க வாறாரே

            புனித ராகவே பூவினில் நிற்க

            கனிவுடன் பணிந்திடுவோம் - நிதமும்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...