1. அதோ! மாட்டுத்
தொழு பார்!
மேய்ப்பர் போற்றும் பாலன் யார்?
பல்லவி
இவர் தான் மா வல்ல கர்த்தர்
இவர் மகிமையின் ராஜா
திருப்பாதம் பணிவோம்
ராஜ கிரீடம் சூட்டுவோம்
2. கஷ்டமாய் வனத்தில் யார்
உபவாசம் செய்கிறார்? - இவர்
3. அன்பின் வார்த்தை சொல்வதார்
ஜனம் துதிசெய்வோர் யார்? - இவர்
4. துக்க பாரம் நோய் உள்ளார்
குணமாக்குகிறதார்? - இவர்
5. லாசரின் கல்லறை பார்
அங்கு கண்ணீர் விட்டோர் யார்? - இவர்
6. திரள் ஜனக்கூட்டத்தார்
போற்றி வாழ்த்தும் இவர் யார்? - இவர்
7. இரத்த வேர்வை சிந்தி யார்
ஜெபத்தில் போராடினார்? - இவர்
8. சிலுவையின் காட்சி பார்
அரும் ஜீவன் விட்டதார்? - இவர்
9. சாவை வென்றெழுந்ததார்
அதால் நம்மை மீட்டோர் யார்? - இவர்
10. ராஜ கோலம் அணிந்தார்
லோகம் யாவும் ஆள்கிறார் - இவர்
No comments:
Post a Comment