250. இராகம்: கரஹரப்பிரியை ரூபகதாளம்
பல்லவி
அஞ்சாதே
யேசு ரட்சகர்
ஆத்மத்
துயர் நீக்க வல்லவர்.
அனுபல்லவி
வஞ்சமே மிஞ்சுமா? பஞ்ச பாதகன் நானென்று.
- அஞ்
சரணங்கள்
1.
திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில்
திருச்சுதன் பதம் தழுவி நற்கதிக்
கருள் பெற்றான், என் வேதஞ் சொல்வதை
ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல். - அஞ்
2. வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள்
வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின்,
துள்ளிப் பூரிக்கும் போதுன் மேலே
தூதர் சங்கமும் களிப்பதாலே. - அஞ்
3. மேய்ப்பன் மந்தையை விலக்கின ஆட்டை
வெகு கவலையாய்த் தேடிக் கண்டபின்,
வாய்ப்புடன் மனம் மகிழும் போலே
மானுவே லுனைத் தழுவாமலே. - அஞ்
4. தொண்ணூற் றொன்பது நீதிமான்களில்
துயரடை பாவி யொருவன் மீதினில்
எண்ணருந் தூதர் மகிழ்வதாலே
ரட்சிப் புனக்குப் பலித்ததாலே. - அஞ்
5. மரணத்தின் கூரை ஒடித்த வல்லவன்
வருந்தி அழைத்த விருந்துக்கு வரத்
தருணம் ஈதெனத் தாசர் கூடி,
சாற்றும் மொழியை ஏற்று நீவர. - அஞ்
- லுத்தரன்
பாடல்
No comments:
Post a Comment